எனக்குள் நான்
எழுதாமல் விட்டதைவிட
எழுதி - விட்டவையே
ஏராளம்! ஏராளம்! - ஆம்
ஏட்டில் ஏற்றாமல்
விட்டு விட்டேன்
விற்று இருக்கலாமோ?
வினா எழுப்பும் மனது!
விடை பகர்வதில்லை.
எனக்குள் சில நேரம்
எனக்காகவும்
மவுனிக்கிறேன்!
-----------சங்கை ஒளி மகன்
இது மானிடத்தின் எதிர்காலம்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
இணைய தளத்தின் மூலம்
இதய தளத்தில் இணைய அழைக்கிறேன் *
*********** சிறுபடையான்
Sunday, January 23, 2011
Saturday, January 22, 2011
இல்லாமையின் வல்லமை........
இளமைகளில்தான்
இன்பங்கள் வருகின்றன!
எல்லாமும் இருந்து
”இல்லாமையும்” வந்தால்...
சுகங்களும் அந்நேரம்
சோகங்களாய் சுருங்கிவிடுகின்றதே!
வாழ்வென்னும் வீட்டில்
வறுமையும் விருந்தாளிதான்!
வறும்போது சொல்லிவிட்டு வந்தால்
இளமைக்கு எழுதியனுப்பலாம் - எனக்கு
வாலிபம் தேவையில்லை என்று...!
___________சங்கை ஒளி மகன்
இன்பங்கள் வருகின்றன!
எல்லாமும் இருந்து
”இல்லாமையும்” வந்தால்...
சுகங்களும் அந்நேரம்
சோகங்களாய் சுருங்கிவிடுகின்றதே!
வாழ்வென்னும் வீட்டில்
வறுமையும் விருந்தாளிதான்!
வறும்போது சொல்லிவிட்டு வந்தால்
இளமைக்கு எழுதியனுப்பலாம் - எனக்கு
வாலிபம் தேவையில்லை என்று...!
Tuesday, January 4, 2011
Saturday, January 1, 2011
Subscribe to:
Posts (Atom)