எனக்குள் நான்
எழுதாமல் விட்டதைவிட
எழுதி - விட்டவையே
ஏராளம்! ஏராளம்! - ஆம்
ஏட்டில் ஏற்றாமல்
விட்டு விட்டேன்
விற்று இருக்கலாமோ?
வினா எழுப்பும் மனது!
விடை பகர்வதில்லை.
எனக்குள் சில நேரம்
எனக்காகவும்
மவுனிக்கிறேன்!
-----------சங்கை ஒளி மகன்
No comments:
Post a Comment